ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற அக்கா, தங்கை ரயில் மோதி உயிரிழப்பு

ஆம்பூர் ரயில்நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சகோதிரிகள் மீது ரயில் மோதிய விபத்தில் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த காட்டுக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சாவித்திரி இவரும் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த இவரது சகோதிரியான வசந்தா என்பவரும் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு ரயில் மூலம் செல்ல ஆம்பூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். பின்னர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பெற்றுக்கொண்டு ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராவிதமாக அவ்வழியாக சென்ற விரைவு ரயில் மோதி இருவரும் உடல் சிதைந்து உயிரிழந்தனர்.இதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சகோதரிகள் ரயில் மோதி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story