மதுவை விட மோசமானது புகை - வைரமுத்து.

மதுவை விட மோசமானது புகை - வைரமுத்து.

கவிஞர் வைரமுத்து

உலகில் நான் வெறுக்கும் வாசனை ஒன்று என்றால் புகை வாசனை. மதுவை விட மோசமானது புகை என படிக்காத பக்கங்கள் பட இசை வெளியீட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து பேசினார்.

நடிகர்கள் பிரஜன்,யாசிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ள "படிக்காத பக்கங்கள்" படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி மேடையில் வைரமுத்து பேசியபோது, இந்த விழாவிற்கு நான் மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன். வளரக்கூடிய கலைஞர்களை வாழ்த்த வேண்டும். திரையரங்குகளில் 15 பேர் கூட வரவில்லை என்றால் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு காரணம் யார், இது ஒரு மோசமாக யுகத்தில் தமிழ் சினிமா இருக்கிறது. அந்த காலம் தொழில்நுட்ப காலம். ரசிகர்களை பல பிரிவுகள் துண்டாகிவிட்டன. படங்கள் தோல்வி அடைந்தால் வருத்தப்படுவேன்.

நான் பாட்டு எழுதும் போது சமூகத்திற்கு ஏதாவது ஒரு நீதி, சீர்திருத்தம் கிட்டாதா என்று பயணித்துக் கொண்டு இருக்கிறேன். இது எனக்கு திரைத்துறையில் 44வது வருடம். இப்படத்தில் நான் எழுதிய சரக்கு பாடல் பிடிக்கும். எனது முன்னோடிகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் உள்ளிட்டோர் தமிழ் பாடலின் வழியாக ஒரு கருத்தை சொல்ல நினைத்தனர் அதுதான் நிற்கிறது. மதுவை கொண்டாடித்தான் தமிழில் பாடல்கள் வந்துள்ளது.

இப்படத்தில் மதுக்கடையில் மதுவுக்கு எதிராக பாடல் வந்துள்ளது. இப்பாடல் முழுக்க முழுக்க மதுவுக்கு எதிரான பாட்டு. நாட்டில் மதுவால் அதிக விபத்துகள் நடப்பதாக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகில் நான் வெறுக்கும் வாசனை ஒன்று என்றால் புகை வாசனை. மதுவை விட மோசமானது புகை. பாட்டுக்கு பெயர் வைத்தது மொழி அதற்கு அழகு செய்தது இசை. நல்ல பொருளாக இருந்தால் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தங்கம் தங்கம் தான். வைரம் வைரம் தான். நல்ல பொருள் எத்தனை காலம் ஆனாலும் தன் தடைகளை கிழித்துக்கொண்டு வெளிவந்துவிடும். கதை நன்றாக இருந்தால் நிச்சயம் அந்த படம் வெற்றி பெறும். என்றார்.

Tags

Read MoreRead Less
Next Story