மாமனாரை அடித்து கொலை செய்த மருமகன்!

மாமனாரை அடித்து கொலை செய்த மருமகன்!

மாமனார் அடித்து கொலை 

மாமனார் இருதயமணியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மருமகன் ஆனந்தை புதுக்கோட்டை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை திரவியபுரம் பகுதியை சேர்ந்தவர் இருதய மணி , இருதயமணியின் மகள் விண்ணரசிக்கும் தூத்துக்குடி சின்ன கண்னுபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனந்த் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார் இதைத்தொடர்ந்து, கணவன் மனைவி இடையே ஏற்ட்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விண்ணரசி மற்றும் ஆனந்த் ஆகியோர் கடந்த ஓராண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டைக்கு சென்ற ஆனந்த் தனது மாமனார் இருதய மணியுடன் தனது மனைவியை வீட்டிற்கு தண்ணுடன் அனுப்பி வைக்க சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் மாமனார் இருதய மணி தனது மகள் விண்ணரசியை அனுப்பி வைக்க மறுத்துள்ளார் இதைத் தொடர்ந்து மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்காத ஆத்திரத்தில் இருதயமணியை அங்கே இருந்த கம்பால் தலை மற்றும் முகத்தில் கொடூரமாக ஆனந்த் தாக்கியுள்ளார். சம்பவ இடத்திலேயே மாமனார் இருதய மணி பரிதாபமாக இறந்தார்

இதையடுத்து மருமகன் ஆனந்த் அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டார் இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் துறையினர் இருதய மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளி ஆனந்தை தேடி வருகின்றனர் தூத்துக்குடி அருகே ஓர் ஆண்டாக பிரிந்து வாழும் மனைவியை தன்னுடன் அனுப்ப மறுத்த மாமனாரை மருமகன் கம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story