தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் பிரச்சாரம் தொடக்கம்

தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் பிரச்சாரம் தொடக்கம்

பிரச்சாரத்தை தொடக்கிய வேட்பாளர்

பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் அதிமுக சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் பிரச்சாரத்தை தொடங்கினார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தென்சென்னை வேட்பாளராக போட்டியிட உள்ள ஜெயவர்த்தன் பட்டினபாக்கம் துலுக்கணத்தம்மன் கோயிலில் இருந்து மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கினார். உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடி உள்ளிட்டவற்றை கையில் ஏந்தியவாறு வாக்கு சேகரித்தனர், அவர்களுடன் அதிமுக கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய தேமுதிக நிர்வாகிகளும் அவர்கள் கட்சி கொடியை ஏந்தியவாறு அதிமுக தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தனனுக்கு வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story