அண்ணா பல்கலையில் வைக்கப்பட்ட தென் சென்னை வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தென் சென்னையில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக அண்ணா பல்கலையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

18 ஆவது மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் அண்ணா பல்கலைகழக வளாகத்திற்கு தென் சென்னை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் செய்யப்பட்டு கொண்டு வரப்படுகின்றன. முதலில் தியாகராயநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சீல் செய்யப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்ட வாகனம் மட்டும் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து சோளிங்கநல்லூர் வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டுவரப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் பத்திரமாக பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது, பாதுகாப்பு அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் அந்த பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story