தென்மண்டல தலைவர் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை

தென்மண்டல தலைவர்  காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை

ஐஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று தென்மண்டல காவல்துறை தலைவர் என். கண்ணன் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தென்மண்டல காவல்துறை தலைவர் என். கண்ணன் தலைமையில் திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் பிரவேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள முக்கிய வழக்குகளின் நிலை குறித்தும், ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள எதிரிகளை கைது செய்வது குறித்தும், போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைiயில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உட்பட பல்வேறு வழக்குகளின் நிலை குறித்து ஆலோசனை செய்து அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் இக்கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இராஜாமணி, முதல் நிலைக் காவலர் முரளீதரன் மற்றும் தனிப்பிரிவு தலைமைக் காவலர் முருகேசன் ஆகியோரை பாராட்டி தென் மண்டல் காவல்துறை தலைவர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இக்கூடத்தில் தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா, பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் வாக்கரே அக்ஷய் அணில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மணியாச்சி லோகேஸ்வரன், திருச்செந்தூர் வசந்தராஜ், கோவில்பட்டி வெங்கடேஷ், ஸ்ரீவைகுண்டம் மாயவன், சாத்தான்குளம் அருள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிவசுப்பு, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், மாவட்ட குற்றப்பிரிவு சந்திரதாசன், விளாத்திக்குளம் ராமகிருஷ்ணன், ஆயுதப்படை புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story