விஜயகாந்த் உடல்நலம் பெறவேண்டி நாடியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

விஜயகாந்த் உடல்நலம் பெறவேண்டி நாடியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
நாடியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தேமுதிக மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ஏ.ஆர். பூபேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் கே.வி.ஆர். ராஜரெத்தினம் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் என்.எஸ்.சத்தியமூர்த்தி, மதுக்கூர் ஒன்றியச் செயலாளர் ஏ.சிதம்பரம், பட்டுகோட்டை நகரச் செயலாளர் பி. அருளானந்தம், நிர்வாகிகள் பேராவூரணி நீலகண்டன், வழக்கறிஞர் அருணா.நேருகாந்த், எஸ்.கே. ஹிட்லர், தமிழ்ச்செல்வம், எஸ்.ராஜா, ஞானதாஸ், பன்னீர்செல்வம், நட. நாடிமுத்து, சுப்புராஜ், சரவண பெருமாள், சேகர் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற்று மீண்டும் நலமுடன் திரும்பி வர வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது.

Tags

Next Story