படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதி தமிழக மீனவர் பலி !

படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதி தமிழக மீனவர் பலி !

விசைப்படகு

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது.

படகில் இருந்த நால்வரில் 3 மீனவர்கள் மீட்கப்பதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்களின் உறவினர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் துறைமுக பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story