தூத்துக்குடியில் மாநில அளவிலான கலைப் போட்டிகள்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடைபெற்றன.

மதுரை தேனி திண்டுக்கல் திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இந்த கலை போட்டியில் கிராமிய நடனம் மேற்கிந்திய நடனம், மருதாணி வரையும் போட்டி, நெருப்பில்லாமல் சமையல் செய்தல், ஆடை அலங்கார போட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தங்களின் திறமைகளை வெளிக்காட்டினார்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டு வருவதையும் இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்

Tags

Next Story