வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல்: 9 பெட்டிகள் சேதம்

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல்: 9 பெட்டிகள் சேதம்

கல்வீசி தாக்குதல்

வாஞ்சி மணியாச்சி அருகே வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் ரயிலின் 9 பெட்டிகள் சேதமடைந்தன.
நாடு முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி சென்னையில் இருந்து தாம்பரம் விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் வழியாக நெல்லைக்கு அதாவது தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் இந்த ஒரே ஒரு வந்தே பாரத் ரயில் சேவை பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயண நேரம் காரணமாக பயணிகள் இந்த ரயிலில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு புறப்பட்டது. இரவு 10.30 மணியளவில் வாஞ்சி மணியாச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ரயிலின் 9 பெட்டிகள் சேதமடைந்தன. கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து இருப்பு பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story