தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவன் பலி

தண்ணீர் தொட்டியில் மூழ்கி மாணவன் பலி

மாணவன் பலி 

சூளகிரி அருகே பள்ளிக்கு செல்லாமல் தண்ணீர் தொட்டில் மூழ்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சின்னமட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் என்பவரின் மகன் கார்த்திக் 16 இவர் காளிங்கவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கு செல்லமால் காலையில் அப்பகுதியில் சிம்பல்திராடி கிராமத்தின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.

இந்த நிலையில் நீச்சல் தெரியாத சிறுவர் கார்த்திக் நீண்ட நேரமாகி வெளியே வராதால் உடன் இருந்த நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு விரைந்து வந்த பொதுமக்கள் நீரில் மூழ்கி இருந்த சிவனை மீட்டபோது நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவயிடத்திற்கு வந்த சூளகிரி போலீசார் சிறுவனை உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் மாணவன் நீரில் மூழ்கிய உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story