மாணவி கர்ப்பம்: பிளஸ்-2 மாணவர் போக்சோவில் கைது 

மாணவி கர்ப்பம்: பிளஸ்-2 மாணவர் போக்சோவில் கைது 

கோப்பு படம்


குமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கன்னியாகுமரியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் -1 படித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். பெற்றோர் அவரை நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், மாணவி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் கூறினர்.

கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்று பெற்றோர் விசாரித்த போது, நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பிளஸ் -2 மாணவர் ஒருவர் என கூறினார். இதைத்தொடர்ந்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பிளஸ்-2 மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, மாணவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் , மாணவியை காதலித்து வருவதாக கூறினார். இதற்கிடையில் கர்ப்பிணியாக உள்ள மாணவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.

Tags

Next Story