ஆம்னி பேருந்துகளின் மீதான வீதி மீறல் குறித்து ஆய்வு

ஆம்னி பேருந்துகளின் மீதான வீதி மீறல் குறித்து ஆய்வு

கோப்பு படம்


ஆம்னி பேருந்துகளின் மீதான சிறப்புத் தணிக்கை போக்குவரத்து ஆணையர், சென்னை அவர்களின் உத்தரவிற்கிணங்க, விழுப்புரம் சரக துணைப் போக்குவரத்து ஆணையர் ரஜினிகாந்த் தலைமையில், திருவண்ணாமலை மற்றும் ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் C.சிவகுமார்.K.சரவணன், மேற்பார்வையில் மோட்டார்.

வாகன ஆய்வாளர்கள் திருவண்ணாமலை. பெரியசாமி, முருகேசன். கருணாநிதி அடங்கிய குழு திருவண்ணாமலை புறவழிச்சாலையில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டிற்குரிய சாலை வரி செலுத்திய விவரம், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்ட விவரம் ஆகியவை வீதி மீறல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஆய்வின்போது வீதி மீறலில் ஈடுபட்ட பிற மாநில இரண்டு ஆம்னி பேருந்துகள் சிறைப்பிடிக்கப்பட்டு திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டன. மேற்படி இரண்டு பேருந்துகளுக்கும் சாலை வரியாக ரூ.3,50,000/- மற்றும் அபராதமாக இணக்க கட்டணம் ரூ.30,000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சோதனையின் போது மேற்படி இரண்டு பேருந்துகள் தவிர 35 ஆம்னி பேருந்துகளுக்கு பிற காரணங்களுக்காக சோதனை அறிக்கை வழங்கப்பட்டு ரூ.58,500/- அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.35,000/- அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது என திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story