கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - பள்ளி கல்வித்துறை

கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - பள்ளி கல்வித்துறை

பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி

தமிழக அரசு கோடை விடுமுறை அறிவித்துள்ள நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கோடை விடுமுறையில் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தனியார் பள்ளிகள் இயக்குனர் பழனிச்சாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில் அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story