குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வள கல்லூரி மாணவர்கள் ஆய்வு 

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வள கல்லூரி மாணவர்கள் ஆய்வு 

 மீன்பிடி துறைமுகம்

குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் தூத்துக்குடி அரசு மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் 58 மாணவர்கள் பேராசிரியர் மணிகண்டன் என்பவர் தலைமையில் குளச்சல் அரசு மீன்படி துறைமுகத்திற்கு வந்தனர். அவர்கள் குழுவாகப் பிரிந்து மீனவர்களிடம் சென்று மீன்பிடித் தொழில், பிடிபடும் மீன்களின் வகைகள், மீன்பிடிக்க பயன்படுத்தும் வலைகளின் வகைகள் மற்றும் மீன் வரத்து, வருமானம், வானிலை அறிவிப்பு போன்ற விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடி தொழில் செய்யும் பிற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story