தாடியை எடுங்க அண்ணா: அண்ணாமலையிடம் அன்பு வேண்டுகோள்

தாடியை எடுங்க அண்ணா: அண்ணாமலையிடம் அன்பு வேண்டுகோள்

அண்ணாமலை

தாடியை எடுங்க அண்ணா என அண்ணாமலையிடம் அன்பு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த ஆண்டு தொடங்கிய நடைபயண யாத்திரையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவருக்கு, பல இடஙக்ளில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அண்ணாமலை சென்னையில் உள்ள பூந்தமல்லி, மதுரவாயல் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டு இருந்தார். தொடர்ந்து மக்களிடம் பேசிய அவர், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

அதனைதொடர்ந்து, ஒரு பெண் தொண்டர் தாடியை எடுத்துவிடுங்கள் அண்ணா என்று அன்போடு கூற, யாத்திரை முடிந்ததும் நான் கட்டாயம் தாடியை எடுக்கிறேன் என்று கூறினார்.

Tags

Next Story