தமாகா வேட்பாளர் எஸ் டி ஆர் விஜய்சீலன் வேட்புமனு தாக்கல்!

தமாகா வேட்பாளர் எஸ் டி ஆர் விஜய்சீலன் வேட்புமனு தாக்கல்!

தமாகா வேட்பாளர் எஸ் டி ஆர் விஜய்சீலன்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எஸ் டி ஆர் விஜய்சீலன் வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டணி கட்சி தலைவர்களுடன் தமாகா சின்னமான சைக்கிளை ஓட்டி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி துவங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று பாரதிய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ் டி ஆர் விஜய் சீலன் வேட்பு மனு தாக்கல் செய்ய கூட்டணி கட்சி தலைவர்களுடன் வருகை தந்தார். அப்போது தமாகா கட்சியின் சின்னமான சைக்கிளை ஓட்டியபடி வந்து பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறுகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் எனவே பொதுமக்கள் எங்கள் கூட்டணிக்கு தான் வாக்களிப்பார்கள் என்றார்.

Tags

Next Story