விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு

தமிழகத்தில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு என்று தூத்துக்குடி தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறுகையில் "தமிழகத்தில் தங்கள் நிலத்தை பாதுகாப்பதற்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு தான் மேலும் பயிர் காப்பீடு தொகை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை மழை வெள்ள பாதிப்பின் போது நிவாரணங்களையும் வழங்கவில்லை. தமிழக விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் வேறு எம்பிக்களும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து குறைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை, இதன் காரணமாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி விவசாயிகளின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ் விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட போவதாக அவர் கூறினார்.

Tags

Next Story