வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை

வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை

தமிழக அரசு 

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தலைமை செயலாளர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வடகிழக்கு பருவமழை இன்னும் இரு நாட்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழக தலைமைசெயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகமெங்கும் நடைபெற்று வரும் சாலை, மழை நீர் வடிகால் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலைத்துறை செயலாளர், சென்னை மெட்ரோ ரயில் இயக்குநர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே மேற்கொண்டுள்ள பணிகளை மட்டும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story