தமிழக அரசு சாதி வாரிய கணக்கெடுப்பை எடுக்கும்- துரை வைகோ பேட்டி

ஒன்றிய அரசு காலம் தாழ்த்தினால் தமிழக அரசு சாதி வாரிய கணக்கெடுப்பை எடுக்கும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைககோ பேட்டி மருதுபாண்டியர்கள் 222வது நினைவு நாளை ஒட்டி திருப்பத்தூர் செல்வதற்காக மதிமுக முதன்மை நிலை செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். இதைத்தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: திமுகவின் நீட் தேர்வு குறித்த கேள்விக்கு,தமிழகத்தில் நீட் தேர்வை பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கிறது. அதில் மதிமுகவும் ஒன்று என்பதில் மாற்று கருத்து இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திமுக கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது அதற்கு மதிமுக சார்பாக முழு ஆதரவு உண்டு.திமுகவின் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் தேர்தலுக்காக செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு தொடர்ந்து திமுகவுடன் சேர்ந்து அனைவரும் குரல் கொடுத்து வருகிறோம். ஒரு வருடத்திற்கு மேலாகவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் கையெழுத்துக்காக காத்திருந்தது பல போராட்டத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். ஆளுநரால்தான் இந்த ஒரு ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. நீட்விலக்கு தமிழ்நாட்டிற்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. 5 மாநில தேர்தலில் மதிமுக பங்கேற்குமா குறித்த கேள்விக்கு, மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து பாதிக்கப்பட்டனர். அது போல நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. நடிகர் விஜய்யை பார்த்து திமுக, அதிமுக பயப்படுகிறதா என்ற கேள்விக்கு நடிகர் விஜய்யும், அவருடைய தந்தையும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவரும் அரசியல் வருவதற்கு உரிமை உள்ளது ஆனால் அதை முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான். அவர்கள் வரக்கூடாது என்று நினைப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது. அவர்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு,ஐந்து மாநில தேர்தலை ஒட்டி அந்தந்த மாநிலங்களில் வேலை நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. நாடாளுமன்றத் தேர்தலை பொருத்தவரை அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படுகிறது. ஜாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஜாதிவாரி கணக்கெடுப்பை திமுக, மதிமுக என அனைவரும் வலியுறுத்துகிறோம். பீகாரரைப் போல மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம் என்று கூறினாலும் தேசிய ஜனத்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு சேர்ந்து எடுக்கும் போது பல நன்மைகள் உள்ளது, சுலபமாகவும் எடுக்கலாம். ஒன்றிய அரசு காலம் தாழ்த்தினால் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கு எடுப்பு எடுக்கும்.பாஜக பிரமுகர் கைது குறித்த கேள்விக்கு,அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். அவரது கட்சியினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு மாதிரி பேசுகிறார், மாற்றுக் கட்சி கைதுக்கு வேறு மாதிரி அறிக்கை கொடுக்கிறார். என்றார்.

Tags

Next Story