ராக்கெட் விளம்பரத்தில் சீனக் கொடி வந்தது எப்படி...? - குழப்பத்தில் திமுக அமைச்சர்

ராக்கெட் விளம்பரத்தில் சீனக் கொடி வந்தது எப்படி...? - குழப்பத்தில் திமுக அமைச்சர்

ராக்கெட் விளம்பரத்தில் சீனக் கொடி

ஒரே ஒரு விளம்பரத்துக்கு அக்கப்போரா..? -உச்சக்கட்ட டென்ஷனில் முதலமைச்சர் ஸ்டாலின்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்கொடுத்த விளம்பரத்தில் சீன நாட்டின் கொடி இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், மீம்ஸ் கிரியேட்டர்ஸ்க்கு நல்ல கன்டென்டாகவும் அமைந்துள்ளது.

நேற்று தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி இன்று தூத்துக்குடியில் புதிதாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். குலசேகரன்பட்டினத்தில் ரூ.17 ஆயிரத்து 300 கோடி செலவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்ட்மைடப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், தமிழக அரசு சார்பில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ. வேலு, தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், தூத்துக்குடி தொகுதியின் பொறுப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மட்டும் நிகழ்வில் பங்கேற்கவில்லை.

அதற்கு காரணம் எல்லாம் அந்த ஒரேஒரு விளாம்பரத்தால் வந்த வினை தான். முன்னதாக குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்தும், பிரதமர் மோடியின் வருகை குறித்தும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாடு பணிகளை செய்திருந்தார். அதில் ஒன்றாக ராக்கெட் ஏவுதளம் குறித்த விளம்பரமும் வெளியிடப்பட்டது. பிசினஸ் பாலிசியாக தங்களின் பொருட்களை முதலாளிகள் விளம்பரம்படுத்துவது போல், அரசின் திட்டங்களையும் ஆளும் அரசுகள் விளம்பரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வைக்கப்பட்ட விளம்பரம் சர்ச்சையாகி திமுக அரசுக்கு தலைவலியை கொடுத்துள்ளது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் கொடுக்கப்பட்ட பத்திரிகை விளம்பரத்தில், சீனக் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் இடம்பெற்றிருந்தது. அதனுடன் பிரதமர் மோடியை வரவேற்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தின் பெருமையாக அமையும் ராக்கெட் ஏவுதளத்தின் விளம்பரத்தின் இந்திய நாட்டின் கொடிக்கு பதிலாக சீன அரசின் கொடி இடம்பெற்றிருப்பது எதிர்கட்சியினரையும், மக்களையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.

இந்த அளவுக்கு அலட்சியமாக இருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த விளம்பரத்தில் சீனா மீதான திமுகவின் அர்ப்பணிப்பும், நமது நாட்டின் இறையாண்மையின் மீதான அவர்களின் புறக்கணிப்பும் வெளிப்படையாக தெரிகிறது. ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான திமுக, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே தங்களின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

திமுகவினர் இப்படி விரக்தியின் உச்சத்தில் இருப்பது, அவர்களின் கடந்த கால தவறுகளை எப்படியாவது மறைக்க வேண்டும் என்று முயற்சிப்பதையே காட்டுகிறது. சதீஷ் தவான் விண்வெளி மையம் இன்று ஆந்திராவில் உள்ளது , இது தமிழ்நாட்டில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் .. தமிழ்நாட்டில் ஏன் இதுவரை கட்டப்படவில்லை என்பதற்கு ஒரே காரணம் திமுகதான். இஸ்ரோவின் முதல் ஏவுதளம் கருத்தாக்கம் செய்யப்பட்டபோது,​​ இஸ்ரோவின் முதல் தேர்வாக தமிழ்நாடு தான் இருந்தது. அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை கடுமையான தோள்பட்டை வலி காரணமாக கூட்டத்தில் பங்கேற்க முடியாததால், தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்திற்கு வரவழைத்தார். இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர், இறுதியாக மதியழகன் "குடித்த நிலையில்" கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். கூட்டம் முழுவதும் அவர் எந்த முடிவிற்கும் ஒத்துப்போகவில்லை. இதனால் தமிழ்நாட்டிற்கு அந்த திட்டம் வரவில்லை. மேலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் விண்வெளித் திட்டம் தமிழ்நாட்டிற்கு வராமல் திமுக இப்படித்தான் தடுத்தது. திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது” என கடுமையாக சாடியுள்ளார்.

அதேநேரம், திமுக அரசின் இந்த மெத்தனபோக்கை, அடிப்படை ஞானம் இல்லாத அரசியல்வாதிகள் என நெட்டிசன்களும் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திமுக அமைச்சரின் இந்த அலட்சியம் முதலமைச்சர் ஸ்டாலினிற்கு தலைவலியை கொடுத்துள்ளன. இதனால், யாரை நம்பி என்ன வேலை கொடுப்பது என்ற குழப்பத்தையே முதலமைச்சர் ஸ்டாலிற்கு திமுக அமைச்சர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story