வேளச்சேரி கிழக்கு பகுதியில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்

வேளச்சேரி கிழக்கு பகுதியில் வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன்

வாக்கு சேகரித்த தமிழச்சி தங்கபாண்டியன் 

வேளச்சேரி கிழக்கு பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்கு சேகரித்தார்
சென்னை, வேளச்சேரி கிழக்கு பகுதியில் ஐந்தாவது நாளாக திமுக தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.. இந்த தேர்தல் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பகுதி செயலாளர் துரை கபிலன், தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார்.. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தமிழச்சி தங்கபாண்டியன் 5 வது நாளாக நாற்காலியில் அமர்ந்த படியே வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார் 5 நாள் வாக்கு சேகரிப்பு 173-வது வட்டம்,மேற்கு காமராஜ் நகர் பகுதியில் தொடங்கி, 5-வது மெயின் ரோடு, ரங்கநாதபுரம் தெரு, 2-வது மெயின் ரோடு, எல்.பி. ரோடு, பெரியார் நகர், காமராஜ் நகர்,16-வது குறுக்கு தெரு அதனை தொடர்ந்து வாட்டர் டேங்க் 2-வது அவன்யூ, 1-வது குறுக்கு தெரு முதல் 6-வது குறுக்கு தெரு வரை, ஐஸ்வர்யா காலனி மசூதி தெரு, பிள்ளையார் கோயில், காமராஜ் அவன்யூ அரங்கன்னல் சாலை, கஸ்தூரிபாய் நகர் மேலும் மூன்றாவது மெயின் ரோடு, கோவிந்தராஜபுரம் முதல் தெரு, இரண்டாவது மெயின் ரோடு,காந்தி நகர் ,மூன்றாவது மெயின் ரோடு,நான்காவது மெயின் ரோடு வழியாக சென்று கோட்டூர் கெனால் பேங்க் ரோடு பகுதியில் நிறைவு பெறுகிறது.. முதல் நாள் சைதாப்பேட்டை பகுதியில் மொத்தம் 34 இடங்களில் வாக்கு சேகரித்தார். இரண்டாவது நாளாக மயிலாப்பூர் பகுதியில் 40 இடங்களில் வாக்கு சேகரித்தார் அதனை தொடர்ந்து மூன்றாவது நாளாக பள்ளிக்கரணை -யில் 30 இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். நேற்று தி.நகர் பகுதியில் 47 இடங்களில் வாக்கு சேகரிப்பு ஈடுப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று வேளச்சேரி கிழக்க பகுதியில் 20 இடங்களில் வாக்கு சேகரிக்க உள்ளார்.‌ இந்த வாக்கு சேகரிப்பில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்..

Tags

Next Story