வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட தமிழச்சி தங்கபாண்டியன்

வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன்

தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இரண்டாம் கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளார்.

சென்னை, அடையார் பகுதியில் ஐந்தாவது நாளாக இன்று இரண்டாம் கட்டாக திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த தேர்தல் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஜே.எம்.எச். ஆசான் மௌலானா மற்றும் பகுதி செயலாளர் துரை கபிலன், தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார்.

இன்று காலை 8.00 மணி அளவில் வேளச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழச்சி தங்கபாண்டியன் காமராஜ் நகரில் தொடங்கி, 5-வது மெயின் ரோடு, ரங்கநாதபுரம் தெரு, 2-வது மெயின் ரோடு என 20 இடங்களில் வாக்கு சேகரித்தார்‌‌. அதனை தொடர்ந்து தற்போது 174 வது வட்டம் அருணாசலபுரத்தில் தொடங்கி ராமாசாமி கார்டன், ஊரூர் குப்பம், கக்கன் காலனி, தாமோதரபுரம், வண்ணாந்துரை நகர் , சாஸ்திரி நகர் சென்று தொடர்ந்து 179 வது வட்டம், காந்தி சிலை காமராஜ் சாலை, ஈ.வே.ரா.பெரியார் தெரு , அம்பேத்கர் தெரு, என்.எஸ்.கே.தெரு, பாரதியார் தெரு, முத்துலட்சுமி சாலை பீச் ரோடு, டி.எம். மேஸ்திரி தெரு மேலும் அண்ணா காலனி, கலாஷேத்ரா அஷ்டலெட்சுமி கோயில்,ஓடைமாநகர், திடீர் நகர், யூயா கோட்ரஸ், வண்ணாந்துரை பகுதி வழியா வந்து ராம் பிரசாத் ஓட்டல் நிறைவடைக்கிறது.

இந்த இரண்டாம் கட்ட வாக்கு சேகரிப்பு மொத்தம் 20 இடங்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார். இந்த இரண்டாம் கட்டம் வாக்கு சேகரிப்பு இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வாக்கு சேகரிப்பில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் தனது கட்சி கொடியினை கட்டி கொண்டு பேரணிகளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story