சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழச்சி தங்கபாண்டியன்

சைதாப்பேட்டை மேற்கு  பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழச்சி தங்கபாண்டியன்

வாக்கு சேகரித்த வேட்பாளர்

சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் வாக்கு சேகரிப்பில் தமிழச்சி தங்கபாண்டியன் ஈடுபட்டார்.

சென்னை, சைதாப்பேட்டை மேற்கு பகுதியில் 139-வது வட்டம், பேருந்து நிலையத்தில் இருந்து, 13-வது நாளாக திமுக தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பொது மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த 13-வது நாள் வாக்கு சேகரிப்பை அமைச்சர் மா.சுப்பிரணியன்,மற்றும் மாவட்ட செயலாளர் ஜேக்கப் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார். வாக்கு சேகரிப்பு பூங்காவனம் தெரு, கோவிந்தசாமி தெரு ,கிண்டி ரத்னா தெரு, பாலகிருஷ்ணன் தெரு, கெங்கையம்மன் கோவில் தெரு ஏரிக்கரை தெரு, பள்ளிக்கூட தெரு சந்திப்பு, பொன்னியம்மன் கோவில், சாய்பாபா கோவில், ஏரிக்கரை தெரு தொடர்ந்து,, 67-வது தெருசாந்தி வீடு வழி, RR காலனி 1-வது தெரு, RR காலனி 2வது குறுக்கு தெரு, RR காலனி 3வது குறுக்கு தெரு, அண்ணாமலை நகர், கோடம்பாக்கம் ரோடு வழியாக வந்து அண்ணாமலை நகர் 3-வது தெருவில் நிறைவு பெறுகிறது. சைதாப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிக்க வரும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, திமுக நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து, வழி நெடுகிலும் மலர் தூவி, ஆரத்தி எடுத்து பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று தனது அரசியல் கொடிகளை கட்டிக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

Tags

Next Story