கள்ளக்குறிச்சியை "கள்ளச்சாராய குறிச்சியாக" மாற்றியதுதான் திராவிட மாடல்

கள்ளக்குறிச்சியை கள்ளச்சாராய குறிச்சியாக மாற்றியதுதான் திராவிட மாடல்

தமிழிசை சௌந்தரராஜன் 

கள்ளச்சாராயமோ, எந்த சாராயமோ, இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளங்கபடம் இல்லாத கள்ளக்குறிச்சியை" - "கள்ளச்சாராய குறிச்சியாக" மாற்றியதுதான் திராவிட மாடல்.உயிரிழந்தவர்களை நினைத்து வேதனை அடைகிறேன். கவலைக்கிடமாக இருப்பவர்களை நினைத்து கவலை அடைகிறேன்.அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயமோ, எந்த சாராயமோ, இல்லாத ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story