அன்னையர் தினம் - தமிழ்நாடு ஆளுநர் ரவி வாழ்த்து

அன்னையர் தினம் - தமிழ்நாடு ஆளுநர் ரவி வாழ்த்து

ஆளுநர் ரவி

அன்னையர் தினத்தையொட்டி தனது X தள பக்கத்தில் ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தாய்மார்களை போற்றும் வகையில் இன்று(மே 12) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X தளத்தில், "அன்னை என்பவர் வார்த்தையால் வெளிப்படுத்த முடியாத வகையில் நம் வாழ்வை வடிவமைக்கிறார். நம் வாழ்வின் பேரன்பு மற்றும் நெகிழ்ச்சி மிக்க அற்புதமான தூண்களுக்கு அன்னையர் தின வாழ்த்து" என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story