மதுப்போதையில் இறந்து கிடந்த டாஸ்மாக் ஊழியர்

மதுப்போதையில் இறந்து கிடந்த டாஸ்மாக் ஊழியர்
பலி
இரும்புக்குறிச்சி அருகே மதுப்போதையில் டாஸ்மாக் ஊழியர் மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த இருப்புலிக்குறிச்சி அருகே டாஸ்மாக் ஊழியர் இறப்புக் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடையார்பாளையம், வடக்குத் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்வம்(45) . பரணம் கிராமத்திலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த இவர், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இவர், இரும்புலிக்குறிச்சி டாஸ்மாக் கடையில் அதிகளவில் மது அருந்திவிட்டு, அங்கு படுத்து கிடந்தார். உடல் அசைவின்றி கிடந்த அவர் மீது அப்பகுதியினர் தண்ணீரை தெளித்து பார்க்கும் போது, செல்வம் இறந்து இருப்பது தெரியவந்தது.

தகவலறிந்து சென்ற இரும்புலிக்குறிச்சி காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

செல்வத்துக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், நான்கு ஆண் குழந்தைகளும் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Tags

Read MoreRead Less
Next Story