பிரச்சாரத்தை தொடங்கிய தமிழச்சி தங்கபாண்டியன்

பிரச்சாரத்தை தொடங்கிய தமிழச்சி தங்கபாண்டியன்

பிரச்சாரம் மேற்கொண்ட போது 

தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை சைதாப்பேட்டையில் தொடங்கினார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் 01 தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்னும் 3 நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில் திமுக, அதிமுக, பாஜக, நாதக கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய தீவிரப்படுத்து உள்ளனர்.

அந்த வகையில், மீண்டும் தென் சென்னையின் வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். இரண்டாவது முறையாக தென் சென்னையில் போட்டியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனு தாக்கல் செய்ததை முன்னிட்டு அடுத்துக்கட்ட நடவடிக்கையாக தேர்தல் பிரச்சாரம் முதல் நாளாக இன்று சைதாப்பேட்டையில் தொடங்கி, ஆலந்தூர் ரோடு, நெருப்பு மேடு, சிட்டி தோட்டம் அதனை தொடர்ந்து ஜோதியம்மாள் நகர், வி.ஜி.பி.சாலை, பார்சன் காம்ப்ளக்ஸ், விநாயகபுரம் போன்ற ஏழு இடங்களுக்கு சென்று முதற்கட்டமாக தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.

Tags

Next Story