விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும், வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் நன்றி : முதல்வர் ஸ்டாலின்!

விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும், வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் நன்றி  : முதல்வர் ஸ்டாலின்!

 ஸ்டாலின்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,23,689 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,030 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,009 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கும், வெற்றிக்காக உழைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மக்களோடு இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags

Next Story