கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்

கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்

கீழடி அகழாய்வு 

கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கீழடியில் இதுவரை 9கட்ட அகழ்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு கீழடி அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வருடந்தோறும் பிப்ரவரி மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கும் ஆனால் இந்த வருடம் பாராளுமன்ற தேர்தல் காரணமாக அனுமதி வழங்கப்படாத நிலையில் தற்போது பத்தாம் கட்ட அகழாய்வு பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, கீழடி மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள கீழடி, வெம்ப கோட்டை, திருமலாபுரம், ஊத்து கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளன. இதை நாளை 18ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.

Tags

Next Story