தந்தையை கத்தியால் வெட்டி கொலை செய்த சிறுவன் கைது !

தந்தையை கத்தியால் வெட்டி கொலை செய்த சிறுவன் கைது !

தந்தை கொலை

தூத்துக்குடி செல் சீனி காலனி பகுதியில் மது போதையில் தாய் அடித்து துன்புறுத்திய தந்தையே மகன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி செல் சீனி காலனி பகுதியில் மது போதையில் தாய் அனுசியாவை அடித்து துன்புறுத்தியதால் தந்தை சத்தியை அரிவாளால் 15 வயது சிறுவன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென்பாகம் காவல்துறையினர் தந்தையை கொலை செய்த இளம் சிறாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி செல் சீனி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சத்தி இவரது மனைவி அனுசியா இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர் சமையல் வேலை செய்து வரும் சத்தி தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவி அனுசுயாவை அடித்து துன்புறுத்துவடன் குழந்தை களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோன்று நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த சத்தி தனது மனைவி அனுசியாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவரது மூத்த மகனான 15 வயது சிறுவனான வீட்டிலிருந்த அருவாளை எடுத்து தந்தை சத்தியை வெட்டி படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தென் பாகம் காவல்துறையினர் தந்தையை கொலை செய்த இளம் சிறாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் மது போதையில் தாயை துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்து சிறுவன் தந்தையை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story