முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு நாளை விசாரணை

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு நாளை விசாரணை

முன்னாள் அமைச்சர் பொன்முடி 

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண்குவாரி வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீதான செம்மண்குவாரி வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட் டார். நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜம கேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

மேலும் இவ்வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கோர்ட்டுக்கு வரவழைக்கக்கோரி கவுதமசிகாமணி எம்.பி., ஜெயச் சந்திரன், ராஜமகேந்திரன் ஆகியோர் ஏற்கனவே தாக்கல் செய்த ருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இம்மனுக்களை விசா ரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, அம்மனுக்களை தள்ளுபடி செய்த தோடு மீண்டும் இவ்வழக்கு விசாரணை 14-ந் தேதி (நாளை) நடைபெறும் என உத்தரவிட்டார்.

Tags

Next Story