ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர்

ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்த தமிழக முதல்வர்

 மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிகட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிகட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ஜல்லிகட்டு அரங்கத்தில் இன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. போட்டியில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு தலா ஒரு மகேந்திரா தார் ஜீப் பரிசு மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கபணம் பரிசு. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி செலவில் ஜல்லிகட்டு மைதானம் திறக்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் போட்டி தொடங்குகிறது. இதனையொட்டி வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடம், பரிசுபொருள் மாடம் மற்றும் இரண்டடுக்கு வேலி அமைக்கும் பணிகள் முடிவடைந்து தயார்நிலையில் உள்ளது.

இந்த போட்டியில் கலந்துகொள்ள 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று போட்டி தொடங்குவதற்கு. முன்பாகவே காளைகளுக்கும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் டோக்கன் எண் வரிசையின் அடிப்படையிலயே வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்படும். இப்போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 1 மகேந்திரா தார் ஜீப் காரும், 1 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்படுகிறது.

2 வது பரிசு பெறும் காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு பைக் 50ஆயிரம் ரொக்க பணம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் போட்டியின்போது சிறப்பாக களம்காணும் மாடுபிடிவீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் அண்டா சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கபடவுள்ளது. 5000 பேர் வரை போட்டியினை பார்வையிட ஏற்பாடுகள் உள்ள நிலையில்.

அதிகளவிற்கு பார்வையாளர்கள் வருகை தரும்போது சுழற்சி முறையில் போட்டியை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளது.காளைகளுக்கு தீவனங்களும், ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது. போட்டியை முன்னிட்டு கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அதிகளவிற்கு வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை சரக DIG ரம்யா பாரதி தலைமையில், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன்உமேஷ் உட்பட 2200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story