10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் தமிழக முதல்வர்.

10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் தமிழக முதல்வர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

கோவை:அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்கவும் அவர்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காண மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதல்வர் அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார்.இதன் பின்னர் மத்திய சிறைச்சாலையில் அமையவுள்ள செம்மொழி பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பத்தாயிரம் பேருக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி பேருரை ஆற்ற உள்ளார்.இந்த நிகழ்வில் பங்கேற்க வரும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி,கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.


Tags

Next Story