பூத் சீட்டுகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்!

பூத் சீட்டுகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்த ஆட்சியர்!

பூத் சீட்டு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பூத் சீட்டுகள் வழங்கும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வளர்மதி வீடு வீடாக சென்று வாக்காளர் பூத் சீட்டுகளை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறைஅதிகாரிகள் உடனிருந்தனர். மேலும் தொகுதி முழுவதும் பூத் சீட்டுகள் அதிகாரிகளால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story