தமிழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது

தமிழகத்தில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
X

பொன்முடி

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது. கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. 2024-25-ம் கல்வியாண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களில், தகுதியான 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.

முதல்கட்டமாக, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

தொடர்ந்து, வருகிற 25-ந்தேதி முதல் 28-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 29ந்தேதி தொடங்குகிறது.


Tags

Next Story