மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடையவில்லை-திருமாவளவன்

மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடையவில்லை-திருமாவளவன்

மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையவில்லை அவரது நண்பர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்ததாக தொல் திருமாவளவன் குற்றம் சாட்டி பேசினார்.


மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சி அடையவில்லை; அவரது நண்பர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்ததாக தொல் திருமாவளவன் குற்றம் சாட்டி பேசினார்.

அரியலூர், ஏப்..1- மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடையவில்லை, அவரது நண்பர்கள் தான் வளர்ச்சியடைந்துள்ளனர் என்றார் சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன். அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி ஊராட்சியில்,திங்கள்கிழமை தனது பிரசராத்தை தொடங்கிய அவர் மேலும் பேசுகையில், தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியாக 2018}இல் இருந்து இயங்கி வருகிறது. 3 பெரிய தேர்தல்களில் கட்டுக் கோப்பாக இயங்கி வரும் கூட்டணியாகும். இந்தியாக் கூட்டணியை உருவாக்கியதில் , முதல்வர் மு.க.ஸ்டாலினின் பங்கு முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளாக மோடி ஆட்சியில் ,அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் 4 வந்து இடத்துக்கு வந்துள்ளார்.

ஆனால் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடியின் ஆட்சியில் நாடு வளராமல், அவரது நண்பர்கள் தான் வளர்ச்சியடைந்து வருகின்றனர். மோடி மீண்டும் வராமல் தடுக்க பானை சின்னத்துக்கு வாக்களித்து மு.க.ஸ்டாலினின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்றார். அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசுகையில், மக்களவையில் நம்முடைய குரலாக ஒலித்தவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். ஒடுக்கப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குரலாக ஒலித்தவர். அவரின் குரல் மீண்டும் மக்களவையில் ஓங்கி ஒலிக்க அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி செய்யவேண்டும் என்று கூறி பானைக்கு வாக்கு கேட்டார். பிரசாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story