திருத்தணி முருகன் கோவிலில் வரும் 14ஆம் தேதி கந்த சஷ்டி விழா துவக்கம்

திருத்தணி முருகன் கோவிலில் வரும் 14ஆம் தேதி கந்த சஷ்டி விழா துவக்கம்

திருத்தணி முருகன் கோவில் 

திருத்தணி முருகன் கோவிலில் வரும், 14ல் கந்த சஷ்டி விழா துவங்குகிறது. வரும் 14ல் தேதி தங்ககவசம், 15ல் திருவாபரணம், 16ல் வெள்ளி கவசம், 17ல் சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, 18ல் மாலையில் புஷ்பாஞ்சலியும், 19ல் நண்பகலில் உற்சவர் சண்முகருக்கு திருக்கல்யாணத்துடன் சஷ்டி விழா நிறைவடைகிறது. மற்ற ஆறுபடை வீடு முருகன் கோவில்களில் கந்தசஷ்டி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும், ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Tags

Next Story