வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது

கைது

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே நடந்து சென்று கொண்டிருந்தவரிடம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் , அணைக்கட்டு அருகே செதுவாலை கிராமம் கானாறு தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (24). இவர் ஊசூரில் இருந்து தெள்ளூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொணவட்டம் மதினா தெருவை சேர்ந்த சேர்கான் மகன் பாஷா (39) என்பவர் சக்திவேலை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 500 ரூபாயை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் இது குறித்து விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து பாஷாவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags

Next Story