ஆற்றை கடக்க முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்!

ஆற்றை கடக்க முயன்ற முதியவருக்கு நேர்ந்த சோகம்!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முதியவர் சடலமாக மீட்பு

வயலுக்கு செல்வதற்காக சென்ற முதியவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மரணடைந்தார்
சங்கராபுரம் அடுத்த செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன், 62; விவசாயி கூலி தொழிலாளி.இவர் நேற்று முன் தினம் அதிகாலையில் வயலுக்கு செல்வதற்காக செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள‌ மணிமுக்தா ஆற்றை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.தகவலறிந்த உறவினர்கள் ஆற்றில் தேடி பார்த்தபோது முதியவரை இறந்த நிலையில் மீட்டனர். சங்கராபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story