கோரிக்கை வைத்த மக்கள், உடனே நிறைவேற்றிய அமைச்சர்

கோரிக்கை வைத்த மக்கள், உடனே நிறைவேற்றிய அமைச்சர்

கூடுதல் பேருந்தை வரவேற்ற மக்கள் 

பள்ளிநேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கவேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கையை அமைச்சர் உடனடியாக நிறைவேற்றினார். இயக்கப்பட்ட கூடுதல் பேருந்தை பட்டாசு வெடித்து மாணவர்கள் வரவேற்றனர்.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ளது வீரபாண்டி பேரூராட்சி.இங்குள்ள முத்தமிழ்நகரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொறுப்பு அமைச்சர் முத்துசாமியிடம் மனு அளிக்கப்பட்டு நிலையில் உடனடியாக காலை,மாலையில் பள்ளி நேரத்தில் கூடுதலாக பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து நேற்று முதல் கூடுதல் அரசு பேருந்து இயக்கப்பட்ட நிலையில் பள்ளி வளாகத்தில் பேருந்தின் முன்பட்டாசு வெடித்தும், பூசை செய்தும் பேருந்தை பேரூராட்சி நிர்வாகத்தினரும்,பள்ளி மாணவ,மாணவியரும் வரவேற்றனர்.பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் பேரூராட்சி தலைவர் பத்மாவதி ஆகியோர் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள் சிரமம் வந்து சென்று வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.






Tags

Next Story