வரிசையாக நா.த.க நிர்வாகிகளை தட்டி தூக்கிய காவல்துறை - கடுப்பாகிய சீமான் !

வரிசையாக நா.த.க நிர்வாகிகளை தட்டி தூக்கிய காவல்துறை - கடுப்பாகிய சீமான் !

சீமான்

கடலூர் மாவட்டம் வடலூரில் தடையை மீறி போராட்டம் அறிவித்திருந்தால் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாக கூறி காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது.

அனுமதி மறுக்கப்பட்டதையும் மீறி நாம் தமிழர் கட்சியினர் இன்று மாலை போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

இதனை அடுத்து நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்க பேரவை செயலாளர் அன்புத் தென்னரசன், சால்டின், சுரேஷ், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன் மாவட்ட செயலாளர் சாமி ரவி ஆகியோரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு வீட்டுகாவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காவல்துறை அனுமதி மறுத்து கட்சியினரை கைது செய்து வருவதால் வடலூரில் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

சட்டப் போராட்டம் நடத்தை உரிய அனுமதி பெற்று மாற்று தேதியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story