கிடு கிடு வென உயர்ந்த தங்கம் விலை !!

கிடு கிடு வென உயர்ந்த தங்கம் விலை !!

தங்கம் 

தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூபாய் 55 ஆயிரத்தை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை கடந்த மாதத்தில் அதிகரித்து ஒரு சவரன் ரூபாய் 55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவிற்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அட்சய திருதியை அன்று தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 520 உயர்ந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 53 ஆயிரத்து 920 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கம் கிராமுக்கு ரூபாய் 20 உயர்ந்து ₹6,740க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 101 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story