மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது - தவெக

தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுக்கும் பணியை தவெக தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து கௌரவிக்கும் விழா ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தொகுதி வாரியக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியது போல், இந்த ஆண்டும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை தேர்வு செய்யும் பணியானது நேற்று தொடங்கி உள்ளது. தொகுதி வாரியாக தவெக நிர்வாகிகள் மாணவர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதலிடம் பிடித்த நபருக்கு சிறப்பு பரிசும், ஒவ்வொரு தொகுதியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கப்பட உள்ளது‌. மாணவர்களை கௌரவிக்கும் விழா பெரும்பாலும் சென்னையில் ஜூன் 20 முதல் 26 தேதி-குள் நடத்த திட்டமிடப் -பட்டுள்ளதாக தகவல். கடந்த ஆண்டு விட மாணவர்களிடையே நடிகர் விஜய் அதிக நேரம் கலந்துரையாட உள்ளார்..

Tags

Next Story