சத்தி அருகே உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் பீதியில் பொதுமக்கள்

சத்தி அருகே உடைந்து விழும்  நிலையில் மின் கம்பம் பீதியில் பொதுமக்கள்

சத்தி அருகே உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் உள்ளாதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


சத்தி அருகே உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் உள்ளாதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சத்தி அருகே உடைந்து விழும் நிலையில் மின் கம்பம் பீதியில் பொதுமக்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள- கொத்தமங்கலம் ரோட்டில் மூலக்கடை பிரிவு அருகே உள்ள பகுதியில் அதிக மின் அழுத்தம் கொண்ட மின் பாதை கடந்து செல்கிறது. இந்த இடத்தில் மின் கம்பிகளை தாங்கி நிற்கும் மின்கம்பத்தின் சிமெண்டு கான்கிரீட்டுகள் சேதம் அடைந்து உள்ளது. அதில் உள்ள கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இதனால் இந்த மின் கம்பம் மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுகிறது. தற்போது கோடை காலத்திலும் மழை பெய்து வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின் கம்பம் சாயும் ஆபத்து உள்ளதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பொது மக்கள் கூறும் போது எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த காற்றடன் கன மழை பெய்தது. அப்போது இந்த பகுதியில் வாழை, பாக்கு மரம், ரோட்டோரமாக இருந்த மரங்கள் சாய்து பெரும் சேதம் ஏற்பட்டது. தற்போது கோடை மழை மிரட்டி வருகிறது. இந்த மின் கம்பம் உடைக்கு விழும் நிலையில் உள்ளது. சாய்ந்து விழும் போது அந்த வழியாக செல்பவர்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் சுழ்நிலை இருந்து வருகிறது. எனவே எந்தவித அசம்பாத சம்பவங்கள் நடைபெறும் முன்பு இந்த மின் கம்பத்தை மின் வாரியத்துறை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story