விஷம் குடித்து பம்ப் ஆபரேட்டர் தற்கொலை!

விஷம் குடித்து பம்ப் ஆபரேட்டர் தற்கொலை!

தற்கொலை

உள்ளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி பம்ப் ஆப்ரேட்டர் விஷன் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காளப்பன் (52). ஊராட்சி பம்ப் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் காளப்பனை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story