அறிவாளை வைத்து வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஸ்டேட்டஸில் அறிவாளை வைத்து பகிர் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது. சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை என தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அருகே உள்ள சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதவன் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்சில் சினிமா பாடல் பின்னணியில் கையில் அறிவாளை வைத்து மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ளார் இந்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் சமூக வலைதளங்களில் வைரலானது இதை தொடர்ந்து இவர் மீது தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் whatsapp ஸ்டேட்டஸில் அறிவாளை வைத்து பகிர் மிரட்டும் வகையில் வீடியோ வெளியிட்ட ஆதவனை தாளமுத்து நகர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் அறிவாளை பறிமுதல் செய்தனர் இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கும் விளைவிக்கும் வகையிலும் ஜாதி மோதல் உருவாக்கும் வகையிலும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுபவர்கள் மற்றும் சாகசம் என்ற பெயரில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து வீடியோ வெளியிடுபவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாறு சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story