திடீரென தீப்பற்றி எரிந்த லாரி

திடீரென தீப்பற்றி எரிந்த லாரி

தீப்பிடித்த லாரி


ஓட்டக்கோவில் கிராமத்தில் கிழிஞ்சல்களை ஏற்றி சென்ற லாரி வெப்பத்தின் காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.

அரியலூர் மாவட்டம் ஓட்டக்கோவில் கிராமத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் ஆலையில் இருந்து கிழிஞ்சல்களை ஏற்றிகொண்டு ஒன்று மேலப்பழூவூர் அருகேயுள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது வெப்பத்தின் காரணமாக லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அரியலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. இதுகுறித்து கீழப்பழூவூர் போலீசார் வழக்குபதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story