தூத்துக்குடியில் உப்பளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

தூத்துக்குடியில்  உப்பளங்கள் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

உப்பள்ங்கள் சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்ய இன்னும் மூன்று மாத காலம் ஆகும் என்பதால் உப்பு விலை உயர்ந்து ஒரு டன் ரூபாய் 4500 வரை விற்பனையானது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி முக்கிய தொழிலாகும் இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு உப்பு உற்பத்தி நன்றாக நடைபெற்றதால் சுமார் 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்பட்டு உப்பள உரிமையாளர்கள் உப்பை தேக்கி வைத்திருந்தனர்.

கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் 17 ,18 ஆகிய இரு தினங்களில் பெய்த கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகனேரி, முள்ளக்காடு , கோவங்காடு, தூத்துக்குடி, மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உட்பளங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டு தேக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் டன் உப்புக்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதன் காரணமாக உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து வழக்கமாக தை மாத முதல் உப்பு உற்பத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக ஏராளமான உப்பள பாத்திகளில் மழைநீர் இன்னும் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக அந்த மழை நீரை அகற்றும் பணியில் உப்பு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போது தான் பாத்திகளை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக உப்பு உற்பத்தி செய்ய இன்னும் மூன்று மாத காலம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மழைக்கு முன்பு வரை ஒரு டன் 2000 ரூபாய் விற்பனையான உப்பு தற்போது மழை சேதம் காரணமாக உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தி செய்ய மூன்று மாத காலம் ஆகும் என்பதால் ஒரு டன் உப்பு 4500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர்ந்துள்ளது உப்பு விலை உப்பு உற்பத்தி செய்யப்பட்ட பிறகு குறையும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story