குற்ற வழக்குகளில் தேடப்பட்ட வாலிபர் சிக்கினாா்!

குற்ற வழக்குகளில் தேடப்பட்ட வாலிபர் சிக்கினாா்!

குற்றவாளி கைது 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்ட வாலிபரை, திருச்செந்தூரில் போலீசார் கைது செய்துள்ளனர். 
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள முளகுமூடு பகுதியைச் சோ்ந்தவா் அஜின்(23). பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இவா், நேற்று திருச்செந்தூா் கோயில் தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, இக்கோயிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவுக்கு தனது குடும்பத்துடன் வந்திருந்த தக்கலை காவல் உதவி ஆய்வாளா் விஜிஸ் பாபுவை பாா்த்ததும், அஜின் தப்பி ஓடி தெப்பக்குளத்தின் நடுவே உள்ள கல் மண்டபத்தில் அமா்ந்து கொண்டாா். அவரை பொதுமக்கள் உதவியுடன் உதவி ஆய்வாளா் பிடித்து கரைக்கு கொண்டு வந்தாா். பின்னா், தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு திருச்செந்தூா் கோயில் காவல் நிலையத்துக்கு அஜினை அழைத்துச் சென்றாா்.

Tags

Next Story